"நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு ஆக்ஷன் படத்தை பார்த்த திருப்தி.
"நல்ல கதையம்சம் உள்ள படம்."
"அடுத்தடுத்து என்ன நடக்கின்றது என்பதனை யூகிக்க முடியாத திரைக்கதை.
"கேட்க இனிமையான பாடல்கள்."
இப்படி சொல்லிக் கொண்டே போக ஆசைதான். ஆனால் படத்தில் எதுவுமே இல்லை.காதல்
மன்னன்,ஜெமினி போன்ற “அட்டகாசமான” படஙகளை கொடுத்து “அமர்கள”ப்படுத்திய சரண் தான் இந்த படத்தை எடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை.
கதை இதுதான்.
ஐம்பதாயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொண்ட பண முதலையான கலாபவன் மணிக்கு இரண்டு மகன்கள்.சேர்த்த சொத்துக்கள் எல்லாம் குறுக்கு வழியிலும் அடுத்தவர்களை துன்புருத்தியும் பெறப்பட்டவையகும். இரு மகன்களில் ஒருவர் சொந்த மகன் வினய். மற்றொருவர் வளர்ப்பு மகன் புது முகம் "X"(யார்னு தெர்லப்பா :)). . இருவரிடமும் பாசத்தை கொட்டி வளர்க்கிறார் மணி. இவரின் அட்டகாசங்கலை பொறுக்கமுடியாத தொழில் எதிரிகள் இவரை பழி வாங்க எண்ணி இவரின் மகனை போட்டுத்தள்ள முடிவெடுக்கின்றனர்.
நிற்க,
இதற்கு இடையே life ஐ ஜாலி பண்ணிக்கொண்டிருக்கின்றனர் வினய் யும் மற்றொரு மகனும். விஸ் காம் மாணவியான ஹீரோயின் காஜல் அகர்வால் வீசும் குளிர்பான பாட்டில் வினயின் தலையில் பட்டு ஃபெராரி கார் அக்சிடெண்ட் ஆகி மூன்று லட்சம் வரை செலவாகிறது. இதனை கழிக்க வேலைக்காரியாக வினயின் வீட்டில் இருக்க நேரிடுகிறது(ஜாலிக்காக).
காஜலின் அழகில் மயங்கி வினயும்,இன்னொரு மகனும் காதலிக்க ஆரம்பிக்க இருவரில் சொந்த மகன் வினய்க்கு வைத்த குறியில் அனாதை மகன் இறந்து விடுகிறார். அத்துடன் எப்படா விடுவாய்ங்க என எதிர்பார்த்த இடைவேளையும் வந்து விடுகிறது.
அழகாக/எதிர்பார்ப்பை தூண்ட கூடிய வகையில் இருக்க வேண்டும் என இயக்குனர் முயற்சி செய்யவே இல்லை என்பதை முதல் பாதி நமக்கு தெளிவாக உணர்த்தி விடுகிறது. அந்த அளவிற்கு முதல் பாதி மொக்கை.சில இடஙகளில் சந்தானம் சிரிக்க வைத்தாலும் மற்றவர்களின் மொக்கை முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சரி இரண்டாம் பாதியில் எதாவது பண்ணியிருப்பார்கள் என்றால்,ம்ஹூம். அனாதை மகன் இறந்த பின் வினய்க்கு இருந்த உரிமைகள் எல்லாம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது.என்னவென்று பார்தால் வினய்தான் அனாதயாம். இறந்தவன் உண்மையான மகனாம். இந்த சப்பையான சஸ்பென்சை வைத்துக் கொண்டு சரண் நம்மை இந்த அளவிற்கு சோதித்திருக்க வேண்டாம்.
கதைதான் கொடுமையென்றால் வினயின் பின்னனிக்குரல் அதை விட கொடுமை. இதில் காமெடியென்னவென்றால் இவரின் கம்பெனி CEO வான வட நாட்டு சிங் இவரை விட தமிழ் நன்றாக பேசுகிறார்.
ஹரிஹரன் தமிழில் இசை அமைத்துள்ள முதல் படம்.”மோதி விளையாடு...மோதி விளையாடு” பாடல் மட்டும் ஒ.கே ரகம்.கேட்கலாம்.
உங்கள் நண்பர் எவரையெனும் பழி வாங்க நினைத்தால் இந்த படத்தின் டிக்கட்டை தாராளமாக கொடுக்கலாம்.
அப்ப இதே சரண் இயக்கும் தல யோட “அசல்” படத்தோட கதி?
மொத்ததில் ஆ.வி அல்லது குமுதம் விமர்சனத்தில் கீழ்கண்டவாறு வந்தால் ஆச்சர்ய பட வேண்டாம்.
மோதி விளையாடு – மொக்கை விளையாட்டு
பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...