மெல்லஊர்ந்துஊர்ந்து : பாடியவர் : இளைய ராஜா, எழுதியவர் :நா முத்துகுமார் மெதுவாக ஆரம்பிக்கும் மெலடியான இந்த பாடல் உடனடியாக நம் மனதில் ஒட்டாவிட்டாலும் கேட்க கேட்க நன்றாக உள்ளது. ராஜாவின் வாய்ஸ் தான் முன்பு போல இல்லாமல் என்னமோ செய்கிறது. தாலாட்டுகேட்க : பாடியவர் : இளைய ராஜா எழுதியவர் :முத்துலிங்கம் சோக பாடலான இந்த பாடல் தான் இந்த பாடலில் 90 களில் கேட்ட பழைய இளையராஜா நம் கண் முன்னால் வந்து அசத்தியுள்ளார்.
ஒருவாண்டுகூட்டமே... பாடியவர் : இளைய ராஜா, மாஸ்டர் யதீஸ்வரன் எழுதியவர்: கபிலன்
இளையராஜா மாஸ்டர் யதீஸ்வரனுடன் இணைந்து பாடியுள்ள மற்றுமொரு பாடல். கேட்டவுடனே ஒட்டிக்கொள்ளும் பாடல் இது. அக மொத்தம் , இந்த ஆல்பம் முழுவதிலும் இளையராஜா வேறு பாடகர்களுக்கு சான்ஸ் கொடுக்காமல் இவரே பல பாடல்களை படி ஹிட்டும் ஆக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும் .நான் கடவுள் ஆல்பத்தில் அவ்வளவாக கவராத இளையராஜா இதில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார் என்றால் அது மிகையில்லை.
டோட்டல் ரேடிங் :
டிரைலர்
கீழே ஓட்டளியுங்கள் நண்பர்களே...மறவாமல் பின்னுட்டமிடுங்கள் .
விகடன் டாக்கீசின் முதல் படமான இந்த படத்திக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குநர்ராஜேஷ்இயக்கியுள்ள இந்த படத்தில் சியவா & அனுயா நடித்துள்ளார்கள். பிப்ரவரி14 ம் தேதி வெளியாகவுள்ள இந்தபடத்தின் இசை கடந்த 25ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தைவெளியிடும் என்ற நிலையில், அது விலகி கொண்டதாக இன்று அறிவித்தது.ஆதாரத்திற்கு சொடுக்குக
இந்த படத்தில மொத்தம் தீம் ம்யூஸிக்கையும் சேர்த்து 7 பாடல்கள்.
எம் ஜி ஆர் இல்லேங்க : ஹீரோ அறிமுக song காக வரும் 5 min வரும் இந்த பாடலை ஹரிச்சந்திரன் பாடியுள்ளார். துள்ளல் இசை பாடலான இந்த பாடல் ஜீவா ரசிகர்களைஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்.
ஒரு அடங்கபிடாரி : ஷங்கர் மஹதேவன், ஸ்வேதா பாடியுள்ள இந்த பாடல் அவ்வளவாக நம்மைஈர்க்கவில்லை. யுவனின் பழைய பட சாயல் தெரிகிறது.
எப்படியோ மாட்டிக்கிட்டேன் : கிளிண்டன் , ந்ருத்யா பாடியுள்ள இந்த பாடல் சுமார் ரகம்.
ஒரு கல், ஒரு கண்ணாடி (யுவன்): யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இந்த பாடல் நிச்சயம் இந்த வருட ஹிட்லிஸ்ட்டில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. கேட்க இனிமையாக இருக்கும் இந்தசோக பாடலானது இந்த ஆல்பத்தில் நம்1 என சொல்லலாம்.
தித்திக்கும் தீயை : கே .கே , ஸ்வேதா பாடியுள்ள இந்த பாடலை கேட்கலாம்.
ஒரு கல், ஒரு கண்ணாடி(அட்னன் சாமி) : முன்னே ரசித்த இதே பாடல் ஏனோ அட்னன் சாமியின் குரலில் ரசிக்கமுடியவில்லை .
ஒரு பார்வையில்: ரஞ்சித் பாடியுள்ள இந்த தீம் பாடலான இந்த பாடல் 2 நிமிடத்திற்கும் குறைவானநேரமே வந்தாலும் மனதை வருடுகிறது.