கூகிள் மெயில் இனி தமிழ் மெயில்?

எப்போதுமே அனைத்திலும் புதுமையை முதலாவதாய் அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் தற்போது தமிழ் உட்பட சில இந்திய மொழிகளில் மெயில் அனுப்பும் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.

தமிழ் தவிர ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

இதனை enable செய்ய கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.
- ஜிமெயில் அக்கௌண்ட்டில் login செய்தவுடன் "settings" என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.
- அதில் "gmail display language" என்பதில் "தமிழ்" என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
- பின் "save changes" எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் அனைத்து settings சும் save ஆகி விடும்.

பின் "அஞ்சல் எழுது" எனும் ஆப்ஷனை செலக்ட் செய்தல் கீழ்க்கண்ட கம்போசெர் திரை ஓபன் ஆகும்.




அதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் "தங்க்லீஷ்" என கொச்சையாக அழைக்கப்படும் (அதாவது vanakkam for வணக்கம்) மொழியில் டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்பலாம்.



இந்த வசதியானது கிராமத்தில் இருக்கும் ஆங்கிலம் தெரியாத நண்பர்களுக்கு ஒரு வரப்ப்ரசாதமாகும். நம் கருத்துக்களை நமது தாய் மொழியில் அனுப்பினால் அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். முதலில் மெயில் தமிழில் மெயில் அடிக்க கஷ்டப்பட்டாலும் பிறகு பழகிக்கொள்வர்.{நாம் கற்றுக்கொள்ளவில்லையா?}

பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டை பதியுங்கள். நன்றி...

ஐ பி எல் போட்டிகளை புறக்கணிப்போம்!

இன்று நடந்த இந்தியன் கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்திலோ அல்லது தென்னப்பிரிக்கவிலோ நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவு உண்மையாகவே என் போன்ற பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இந்திய கிரிக்கெட் புன்படுத்தியுள்ளதகவே கருதுகிறேன்.






இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த லலித்மோடி மற்றும் ஷஷாங் மனோகர், மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க மறுப்பதலே வெளிநாடுகளில் போட்டிகளை நடத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

தமிழர்கள் இலங்கையில் செத்துக்கொண்டிருந்த வேலையில் நம் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பி அழகு பார்த்ததுதான் நம் கிரிக்கெட் போர்டு.

அவர்களை பொறுத்தவரையில் எங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்தினாலும் நம் மக்கள் டி வியில் பார்த்துக்கொள்வார்கள். அதன் மூலம் நமக்கு லாபம் கிடைக்கும் என எண்ணுகிறார்கள்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்விகள் இவைகள் தான்.

1) இங்கு தேர்தல் நடக்கிறது என்பதால் வெளிநாடுகளில் கிரிக்கெட் நடத்தும் நம் புண்ணியவான்கள் எப்படி வாக்களிக்களித்து தனது ஜனநாயக கடமைகளை நிறைவேத்த போகிறார்கள்?
2) IPL போட்டிகளை இந்த சீசனில் கட்டாயமாக நடத்தியே தீர வேண்டுமா? (போன தடவை எனக்கு தெரிந்த ஒருவர் தனது பத்தாவது படிக்கும் மகன் IPL போட்டிகளை பார்த்தே மார்க் குறைந்ததாக கூறி வருத்தப்பட்டார்.)
3) இப்படி அவசரஅவசரமாக நடத்துவதற்கு பதிலாக கொஞ்ச நாட்கள் கழித்து நடத்தினால் என்ன? (என்னதான் ஷெட்யூல் இல்லையென்றாலும் BCCI தனது power-ஐ பயன்படுத்தி)
4)ஏற்கனவே பாகிஸ்தான் போல இந்தியா வந்து விளையாட அச்சம் தெரிவிக்கும் வேளையில் நம் ஆட்களே வெளிநாடுகளில் நமது போட்டிகளை நடத்துவது அவமானமில்லையா?
5) ஐ.பி.எல் லின் இந்த முடிவுக்கு எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்க தயங்கும் நம் அரசை என்ன சொல்வது?


எனவே இந்த ஐ பி எல் போட்டிகளை புறக்கணித்து நம் நாட்டில் உள்ள பண வெறியர்களான இந்திய கிரிகெட் போர்டு,ஷாருக், ப்ரீதிஜிண்டா மற்றும் விஜய் மல்லையா போன்றோருக்கு பாடம் புகட்டுவோம்.

கொசுறு:
கடந்த முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கு அதரவு திரட்ட அழைக்கப்பட்ட "ஏய் சைலன்ஸ்" புகழ் விஜய் அழைக்கப்படுவாரா என்பதே அனைவரின் கேள்வி..

தமிழிஷில் ஓட்டளிக்க:

இதுதான் உங்கள் பாஸ்வோர்ட்டா? ஜாக்கிரதை

பொதுவா நம்ம ஆட்கள் புதிதாக மெயில் ஐ.டி க்ரியேட் பண்ணும் போது பாஸ்வோர்ட்டாக "123456" வைப்பது வழக்கம். ஆறு டிஜிட் ஏன் என்றால் அனைத்து மெயில் சர்வர்களும் குறைந்த பட்சம் 6 எழுத்துக்களை கண்டிப்பாக வைக்கவேண்டும் என்று சொல்வதுதான். மேலும் இதுதான் உலகத்திலேயே மோசமான பாஸ்வோர்ட் என வல்லுனர்கள் கணித்துள்ளார்கள். இரண்டாவதாக நம் மக்கள் அதிகம் பயன்படுத்துவது "password" என்பதாகும். இதே போல் "qwerty" (கீ போர்டில் உள்ள முதல் ஆறு ஆங்கில எழுத்துக்கள்), abc123, letmein,monkey,myspace1,password1 மற்றும் blink182 போன்றவைகள் PC Magazine நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.



இதில காமெடி என்னவென்றால் மேலேயுள்ள அனைத்தும் பொதுவாக உலக மக்கள் மனதில் உள்ள வார்த்தைகள் போல தோன்றினாலும் கீழேயுள்ள லிஸ்ட் சுவராஸ்யமாக உள்ளது. ncc1701(விண்வெளி ஊர்தி ஒன்றின் பெயர்),thx1138,qazwsx(கீ போர்டு முதல் மற்றும் இரண்டாம் வரிசைகள் ),666666(ஆறு ஆறுகள்),7777777(ஏழு ஏழுகள்) போன்றனவும் பொதுவான பாஸ்வர்டாக பயன்படுத்துவது எல்லாரும் ஒரே மாதிரி சிந்திப்பதையே கட்டுகிறது. கொரியர் மெயில் தளம் "batman", "bond007" மற்றும் "cocacola" போன்றவைகளும் அதிகமாக புழக்கத்தில் உள்ள கடவுச்சொல்லாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் டாப் 100 மோசமான பாஸ்வர்டுகளுக்கு இங்கே சொடுக்கவும்.

எப்படி
பாதுகாப்பான பாஸ்வர்டுகளை உருவாக்குவது?


1) எந்த சூழ்நிலையிலும் அகராதியிலுள்ள (dictionary) வார்த்தைகளை பாஸ்வர்டாக பயன்படுத்தக்கூடாது. ஹேக்கர்கள் இதன் மூலமே ஹேக் செய்வார்கள்.

2) பாஸ்வர்ட் அமைக்கும் பொது ஷிப்ட் கீக்களை பயன்படுத்தி காபிடல் லெட்டர்களை பயன்படுத்த வேண்டும்.
3) நாம் அமைக்கும் ரகசிய சொல்லில் ஸ்பெஷல் கேரக்டர் இருக்குமாறு வைக்க வேண்டும்.
4) நமது பெயரின் ஒருபகுதியோ அல்லது மகன்/மகள் பெயர்களையோ வைக்க கூடாது.
5) குறைந்த பட்சம் 60 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வோர்டை மாற்றுவது நல்லது. மேலும் சில டிப்ஸ் நீங்கள் அமைத்த பாஸ்வர்ட் பாதுகாப்பானதா என அறிய இங்கே சொடுக்கவும்.


கொசுறு
செய்தி:
இணையம் பயன்படுத்தும் மக்களில் 61% பேர்கள் ஒரே யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட்களை வேறுவேறு தளங்களுக்கு பயன்படுத்துகின்றனர். அதில் நீங்களும் ஒருவர்தானே :)

தமிழிஷில் ஓட்டளிக்க...

அயன் சூர்யா - அசத்தல் படங்கள்

வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் அயன். இந்த படத்தில் தமன்னா ஜோடியாக நடித்துள்ளார். பிரபு கௌரவமான வேடத்தில் நடித்துள்ளார். கே.வீ. ஆனந்த் இயகியுள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்கள் வாரணம் ஆயிரம் அளவுக்கு இல்லாவிட்டாலும் கேட்கும்படியாகவே உள்ளது.

இப்படத்தின் லேட்டஸ்டு ஸ்டில்ஸ் கீழே.














































தமிழிஷில் ஓட்டளிக்க