ஆஸ்கர் தமிழன் சென்னையில் :படங்கள்

ஒரே படத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற முதல் இந்தியரான,தமிழரான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. (விஜய்,ஷங்கருக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கும் சத்யபாமா போன்ற பல்கலைகழகங்கள் இவரை விட்டுவிட்டால் தேவலை. அவர்களோடு இவரையும் சேர்க்க வேண்டாம்). இன்று சென்னை வந்த ஏ.ஆர்.ஆருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பட்டது.

புகைப்படங்கள் கீழே..






















தமிழனாக பிறந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக ஆஸ்கர் நாயகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இதே கருத்தை மும்பையிலும் கூறுவார் என நம்பலாம்.

புகழ் வரும்போது மனிதர்கள் எல்லாவற்றையும் மறப்பார்கள். ஆனால் நம் இசை புயல் இறைவனை,அம்மாவை,தமிழை நினைத்து இருப்பது நம் அனைவருக்கும் பெருமை.
மென்மேலும் விருதுகள் பெற வாழ்த்துவோம்.

பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்க கூடாத பத்து கேள்விகள்

வலைப்பதிவுலகில் உள்ள பதிவர்களில் 10 கேள்விகள் கேட்காத ஆட்களே இல்லை. மீதமுள்ளோர் யார் என்று பார்த்தால் பத்தாம் வகுப்பு மாணவர்களும்,பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் மட்டுமே... ("ப"வுக்கு "பா". :-) ). எனவே 1998 பத்தாம் வகுப்பில் படித்ததை ரூம் போட்டு யோசித்ததில் உதித்தவைகள் இவைகள்...

இந்த 10 கேள்விகள் கான்செப்ட்டை ஆரம்பித்தவர் பொறுத்தருள்க...



1) சிவப்பு பாஸ்பரஸிர்கும்,வெண் பாஸ்பரஸிர்கும் உள்ள வேற்றுமைகள் என்ன?
2) நாலடியார் குறிப்பு வரைக
3) உங்கள் ஊரில் உள்ள குடிநீர் பிரச்சினையை போக்க உங்கள் மாவட்ட கலெக்டருக்கு மடல் வரைக..
4) நீ முதலமைச்சராக வந்தால் என்னன்ன செய்வாய் என கற்பனை கட்டுரை வரைக...
5) "அகர" என தொடங்கும் திருக்குறளை அடி பிறளாமல் எழுதுக.
6) "சேக்கிழார்,சீத்தலை சாத்தனார்" பற்றி குறிப்பு வரைக.
7) இரட்டை கிளவி மற்றும் அடுக்குதொடர் - வேறுபாடுகளை கூறு.
8) வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன?
9) மழை எவ்வாறு பொழிகிறது?
10) சிறுநீரகத்தின் படம் வரைந்து பாகம் குறி..


பதிவு பிடித்திருந்தால் தமிழிஷில் ஓட்டளியுங்கள். மேலும் நீங்களும் கேள்விகளை சேர்க்கலாம். :)